கோவை : கோயம்புத்தூரில் போலி டெலிகால் சென்டர் நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 6 ஆயிரம் வாடிக்கையாளர் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
கோயம்புத்தூர் ஆவாரம்பாளையம் இளங்கோ நகர் கிழக்கு வீதியில் வசிப்பவர் யுவராஜ பாண்டியன். இவர் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- கோவையில் டி.எஸ்.பேங் கிங் சோலியூசன் என்ற நிறுவனம் நடத்தி வரும் தினேஷ் (25) எனக்கு அறிமுகம் ஆனார். இந்நிலையில், எனக்கு அவர் இணைய வழி மூலம் வங்கி கடன் வாங்கி தருவதாக தெரிவித்தார். இதையடுத்து, அவர் கேட்டதால் எனது ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ஒ.டி.பி.விவரங் களை அவரிடம் கொடுத்தேன்.
இந்நிலையில், எனக்கு தெரியாமல் எனது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி உள்ளார். மேலும், அந்த வங்கி கணக்கு மூலம் ரூ.1 லட்சத்து 33 ஆயிரம் கடனை எனது பெயரில் பெற்று என்னிடம் தராமல் அதனை மோசடி செய்து விட்டார். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேசை கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர் போலியாக டெலிகால் சென்டர் வைத்து நடத்தி வந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து 6 ஆயிரம் வாடிக்கையாளர் விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், டெலிகால் செண்டர் நடத்த பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட் டர், 8 செல்போன்கள், 26 சிம் கார்டுகள், 11 பான் கார்டுகள். 12 ஆதார் கார்டுகள் உள்ளிட் டவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தினேசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.