சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோவையில் உள்ள பிரபல பிரியாணி கடை மீது கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோவை காந்திபுரம் 11வது வீதியில் செயல்பட்டு வருகிறது எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை. அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சலுகை விலை மூலம் பிரியாணி வழங்கி வருகின்றனர். இதனால் அங்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது.
மேலும் படிக்க: வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு… திமுக நிர்வாகிக்கு தொடர்பு ; டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு..!!!!
இந்நிலையில் நாள்தோறும் அங்கு கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் சேகரித்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த சாலையில் கடை அருகே மூட்டை மூட்டையாக இறைச்சி கழிவுகளை சேகரித்து வைத்து உள்ளனர். அந்த வழியில் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த சாலையை கடந்து செல்லும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டு உள்ளது. நடந்து செல்லும் பாதசாரிகள் துணியால் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, இது போன்று சாலையோர கடைகளில் நடந்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால் பிரபல பிரியாணி கடை என்பதால் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அப்பகுதியில் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.