சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோவையில் உள்ள பிரபல பிரியாணி கடை மீது கோவை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா..? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
கோவை காந்திபுரம் 11வது வீதியில் செயல்பட்டு வருகிறது எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடை. அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக சலுகை விலை மூலம் பிரியாணி வழங்கி வருகின்றனர். இதனால் அங்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது.
மேலும் படிக்க: வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு… திமுக நிர்வாகிக்கு தொடர்பு ; டிடிவி தினகரன் பரபர குற்றச்சாட்டு..!!!!
இந்நிலையில் நாள்தோறும் அங்கு கழிவுகள் மற்றும் இறைச்சி கழிவுகள் அதிக அளவில் சேகரித்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த சாலையில் கடை அருகே மூட்டை மூட்டையாக இறைச்சி கழிவுகளை சேகரித்து வைத்து உள்ளனர். அந்த வழியில் துர்நாற்றம் வீசி வருவதால் அந்த சாலையை கடந்து செல்லும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் ஏற்பட்டு உள்ளது. நடந்து செல்லும் பாதசாரிகள் துணியால் மூக்கை மூடிக்கொண்டு செல்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, இது போன்று சாலையோர கடைகளில் நடந்தால் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆனால் பிரபல பிரியாணி கடை என்பதால் இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அப்பகுதியில் அந்த சாலையை பயன்படுத்தும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.