பொள்ளாச்சி அருகே பெற்ற மகனை கழுத்தை நெரித்து கொலை செய்த அப்பாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள வஞ்சியபுரம் பிரிவு சக்தி நகரில் குடியிருந்து வந்தவர் கார்த்தி கண்ணன். இவர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி, அதிக குடிப்பழக்கம் காரணமாக மனைவி அவரை விட்டு விவாகரத்து பெற்று பிரிந்து சென்று விட்டார்.
இந்த நிலையில், கார்த்திக் கண்ணன் அதிக குடிபோதையில், தந்தை சர்க்கரை தங்கத்துடன் தகராறு செய்து, சட்டையை பிடித்து அடிக்க முற்பட்டுள்ளார். அப்போது, கார்த்திக் கண்ணன் கழுத்தில் போட்டிருந்த துண்டை, சக்கரை தங்கம் பிடித்து முறுக்கி கார்த்திக் கண்ணனை அடித்து பெட்ரூமில் படுக்க வைத்துள்ளார்.
மயக்க நிலையில் பெட்ரூமில் படுத்திருந்த கார்த்திக் கண்ணன் பேச்சு மூச்சுயின்றி இருந்ததால், கார் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கார்த்தி கண்ணன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்கு கார்த்திக் கண்ணனின் உடல் வைக்கபட்டுள்ளது. பொள்ளாச்சி அரசு மருத்துவமனை வந்த கோட்டூர் காவல்துறையினர் சக்கரை தங்கத்தை, கோட்டூர் காவல் நிலைய போலீசார், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
This website uses cookies.