கோவை ; வால்பாறை புது தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கியதில், அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட இஞ்சிபாறை நல்லகாத்து பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக நான்கு பேரை கரடி தாக்கியது.
அதனைத் தொடர்ந்து, வால்பாறை புது தோட்டம் பகுதியில் கள மேற்பார்வையாளரை கரடி தாக்கி படுகாயம் அடைந்துள்ளார். உட்பிரீயருக்கு சொந்தமான புது தோட்டம் பகுதியில் பணிபுரிந்து வரும் முத்துக்குமார் 12ஆம் நெம்பர் காட்டுப் பகுதியில் பணி மேற்பார்வையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, புதரில் இருந்து மறைந்திருந்த கரடி திடீரென தாக்கியது.
இதில் முத்துக்குமாரின் இடது கை மற்றும் மணிக்கட்டு பகுதிகள் காயமடைந்தது.
இதனை அப்பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் கூச்சலிட்டு அதனை விரட்டி, அவரை காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவி அழகு சுந்தர வள்ளி, துணைத் தலைவர் த.மா. செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதனிடையே, அப்பகுதியில் சுற்றித் திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவுக்கு முழுக்கு போட உள்ள விஜய் தனது கடைசி படம் ஜனநாயகன் என அறிவித்துள்ளார். மேலும் அரசியலில் தனது முழு…
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் உயர்ந்துள்ளது சாமானிய மக்களுக்கு ஷாக்கை கொடுத்துள்ளது. பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனக்ள் 14.20…
கிங்ஸ்டன் பட விழாவில் எஸ் தாணு பேச்சு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தற்போது பல படங்களில்…
பீல் பண்ண ஷ்ரேயா கோஷல் இந்தியாவின் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஷ்ரேயா கோஷல்,இவர் ஹிந்தி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்தாலும் தமிழ்,தெலுங்கு,மலையாளம்…
பட்டையை கிளப்பும் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி…
சீர்காழி குழந்தை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர்…
This website uses cookies.