கோவை அரசு மருத்துவமனையில் 5 நாட்கள் நோயாளியை தரையில் படுக்க வைக்கப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 7000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனையில் விரிவாக்க கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனையின் எம்.எம் 2 வார்டு பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவரை கடந்த ஐந்து நாட்களாக தரையில் படுக்க வைத்துள்ளனர். அவர் வயிற்று வலியால் துடித்து அலறிக் கொண்டே இருந்தார். ஆனால் அவரை மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் என யாரும் கண்டு கொள்ளவில்லை என அந்த வார்டில் உள்ள மற்ற நோயாளிகளின் உடன் இருப்பவர்கள் தகவலாக கூறுகின்றனர்.
இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு வந்த ஒருவர் இந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ அரசு மருத்துவமனையின் முதல்வர் நிர்மலாவுக்கு அவர்களுக்கு அனுப்பப்பட்டதாக தெரிகின்றது. இதனை பார்த்த அவர் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார் தற்பொழுது இந்த காட்சி வைரலாகி பரவி வருகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.