கோவை போத்தனூர் பகுதியில் தோண்டப்பட்டு சரியாக மூடப்படதாக சாலையில் சிக்கிய அரசு பேருந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலை பராமரிப்பு பணிகள், குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, கோவை போத்தனூர் பகுதி ரயில்வே மண்டபம் அருகில் குழாய்கள் பதிப்பதற்காக சாலை தோண்டப்பட்டுள்ளது.
தோண்டப்பட்ட சாலை சரிவர மண்ணை கொண்டு மூடாமல் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவ்வழியாக போத்தனூரில் இருந்து துடியலூர் செல்லும் எண் 4 அரசு பேருந்து சரியாக மூடப்படாமல் இருந்த குழியில் சிக்கியது. பேருந்தின் முன்புறத்தின் ஒரு சக்கரம் அரைவாசிக்கும் மேல் சிக்கி நின்றது. இதனால், பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டு வேறு பேருந்திற்கு மாற்றி விடப்பட்டனர். பின்னர், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்து குழியில் இருந்து வெளியில் எடுத்தவுடன் காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.