கோவை அரசு கலை கல்லூரியின் ஆண்டு விழாவில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிய தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை அரசுக் கலை கல்லூரியில் நடத்தப்படும் ஆண்டு விழாவையொட்டி, மாணவர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆசிரியர் ஒருவர், உடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் கூடிய சுற்றறிக்கையை அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
அந்த சுற்றறிக்கையில், கோவை அரசு கலை கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து வர தடை விதிக்கப்படுவதாக கல்லூரி சார்பில் கட்டுப்பாட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவுக்கு வரும் மாணவர்கள் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வரலாம் என்றும், மாணவர்கள் உணவுகள் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கல்லூரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடாத போதும், ஆசிரியர் ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் முடிவு எனக் கூறி, ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
எனவே, ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நாளை போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93. நேற்று இரவு 12.30…
நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம் உருவாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மனோரஞ்சன் காலியா முன்னாள் எம்எல்ஏவாக…
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
This website uses cookies.