கோவை : நேற்று இரவு பலத்த மழை பெய்ததால் கோவை ரயில் நிலையம் பாலம் மற்றும் உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
கோவையில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது குறிப்பாக காந்திபுரம் ரயில் நிலையம் கணபதி பீளமேடு லட்சுமி மில் ராமநாதபுரம் ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அடியில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல, உப்பிலிபாளையம் மேம்பாலம் அடியிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை ஆணையாளர் சர்மிளா நேரில் ஆய்வு மேற்கொண்டு, சுரங்க பாதைகளில் தேங்கிய நீரை, இராட்சச மோட்டார்கள் மூலம் அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்றும் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.