கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.
கோவை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் அரசின் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி மற்றும் ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் தங்கியிருந்து கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திடீரென்று கலெக்டர் சமீரன் மாணவர் நல விடுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இரவு நேர உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து விடுதியில் உள்ள மாணவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
வார்டன் விடுதியில் தங்குகிறாரா, வாரந்தோறும் உணவுடன் முட்டை வழங்கப்படுகிறதா? புரத சத்து நிறைந்த உணவு வழங்கப்படுகிறதா? என்பது குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.
இதனைதொடர்ந்து, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார். அப்போது பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிகள் உள்ளிட்டோரிடம் சிகிச்சைகள், டாக்டர்கள், நர்ஸ்கள் சரியாக பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் அங்கு தங்கியிருந்து பணி புரியும் நர்ஸ்களிடம் குறைகள் கேட்டறிந்தார்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.