கோவையில் ஏலச்சீட்டு நடத்தி 96 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார்(51), சுமதி(46) தம்பதியினர். இவர்கள் அப்பகுதியில் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இவர்களது ஏலச்சீட்டு நிறுவனத்தில் சூலூர் பகுதியில் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் 13,80,000 பணம் செலுத்தி உள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து ஸ்ரீதேவி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
விசாரணையில் அந்த நிறுவனத்தில் மேற்கொண்டு மைதிலி, ஜெய்சக்தி, கோவிந்தராஜ் ஆகியோரும் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. மேலும், இதுபோன்ற 43 பேரிடம் ஏலச்சிட்டு பணம் 96 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து ரமேஷ்குமார் மற்றும் அவரது மனைவி சுமதியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.