கோவையில் ஏலச்சீட்டு நடத்தி 96 லட்சம் மோசடி செய்த கணவன் மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் குமார்(51), சுமதி(46) தம்பதியினர். இவர்கள் அப்பகுதியில் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரை ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இவர்களது ஏலச்சீட்டு நிறுவனத்தில் சூலூர் பகுதியில் சேர்ந்த ஸ்ரீதேவி என்பவர் 13,80,000 பணம் செலுத்தி உள்ளார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர்கள் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியுள்ளனர். இது குறித்து ஸ்ரீதேவி கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்ததை தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
விசாரணையில் அந்த நிறுவனத்தில் மேற்கொண்டு மைதிலி, ஜெய்சக்தி, கோவிந்தராஜ் ஆகியோரும் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. மேலும், இதுபோன்ற 43 பேரிடம் ஏலச்சிட்டு பணம் 96 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து ரமேஷ்குமார் மற்றும் அவரது மனைவி சுமதியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.