கோவையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் தடாகம் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இதனால், கனிம வளங்கள் அதிகமாக கொள்ளையடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவிற்கிணங்க சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் மூடப்பட்ட செங்கல் சூளைகள் அனைத்திற்கும் சீல் வைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக மாதம்பட்டி, தென்கரை உள்ளிட்ட பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட 21 செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பேரூர் வட்டாட்சியர் காந்திமதி தலைமையில் பேரூர் காவல்துறையின் பாதுகாப்புடன் செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இனிவரும் நாட்களில் அனைத்து தாலுகாவிலும் நீதிமன்றம் உத்தரவு வழங்கிய அனைத்து சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கும் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
This website uses cookies.