Categories: தமிழகம்

AI தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல்.. காட்டு யானைகளை நவீன தொழில்நுட்பத்தில் விரட்டும் மலை கிராமம்..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் வன எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமங்களில் புகுந்து விவசாயத்தை சேதப்படுத்தி வருகின்றன.

வன விலங்குகளை தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சூரிய மின்வேலிஅமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், வனவிலங்குகளை கட்டுப்படுத்துவது வனத்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது.

இந்நிலையில், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் விதமாக காரமடை அடுத்துள்ள கெம்மராம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் நவீன தொழில் நுட்பமான ஏ.ஐ. (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வனவிலங்குகளை தடுக்க நூதன முறையில் சோதனை முயற்சியை மேற்கொண்டது.

இந்த சோதனை முயற்சியில் யானைகள் ஊருக்குள் நுழையும் வழியில் கண்காணிப்பு கேமரா, ஒலி பெருக்கி உள்ளிட்ட கருவிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் வீடியோ மானிட்டருடன்இணைக்கப்பட்டுள்ளது. கேமராவில் பதிவாகும் காட்சிகள் வனத்துறைஅலுவலகம்,ஊராட்சிஅலுவலகம் மற்றும் பொதுமக்களுக்கு சமிக்ஞை(சிக்னல்) கொடுக்கும் வகையில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, கேமரா வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து 400 மீட்டர்தொலைவிற்குள் வனவிலங்குகளின் நடமாட்டம்தென்பட்டால் இந்த கேமரா மூலம் கண்டறியப்பட்டு ஏ.ஐ. தொழில்நுட்ப கருவிக்கு சிக்னல் அனுப்புகிறது.அங்கிருந்து வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் சைரன், பழங்குடி இன மக்கள் எழுப்பும் ஒலியின் சப்தம்,ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கும்போது ஏற்படும் சப்தம் உள்ளிட்ட பல்வேறு சப்தங்களை தானாகவே ஒலிக்கிறது.

அந்த ஓசைக்கு பயந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அங்கிருந்து விலகிச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது..ஊராட்சி நிர்வாகத்தின் இந்த நூதன முறை சோதனை முயற்சி வெற்றி அடைந்ததன் காரணமாக இரவு முழுவதும் கண் விழித்து தோட்ட காவல் செய்து வந்த கிராம மக்கள் தற்பொழுது நிம்மதி அடைந்துள்ளனர்.

Poorni

Recent Posts

திருமணம் ஆகுறதுக்கு முன்னாடியே கர்ப்பம்; அப்பா யார்னு கேட்பாங்களே? விஜய் டிவி பிரியங்காவின் பகீர் பின்னணி

டாப் தொகுப்பாளினி விஜய் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வலம் வருபவர்தான் பிரியங்கா தேஷ்பாண்டே.…

58 minutes ago

பேக்கரி டீலிங்… நீட் தேர்வு குறித்து காரசாரம் : அமைச்சருக்கு அதிமுக கடும் எதிர்ப்பு!

நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டு வந்தது யார் என்ற விவாதம் இன்று சட்டபேரவையில் திமுக - அதிமுக இடையே காரசார…

1 hour ago

விபத்துக்கு கிடைத்த வெகுமதி- கார் ரேஸில் மீண்டும் தடம் பதித்த அஜித்குமார்! மாஸ் காட்டுறாரே!

அஜித்தும் கார் ரேஸும் அஜித்குமார் சினிமாவுக்கு நடிக்க வந்ததற்கு காரணமே அதில் வரும் பணத்தை வைத்து  கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்குத்தான்…

2 hours ago

3 மகள்களுக்கு தாயான பிரியங்கா.. 2வது கணவர் வசி குறித்து பரபரப்பு தகவல்!

பிரியாங்காவுக்கு நடந்த 2வது திருமணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் திருமணம் செய்த வசி சாச்சி குறித்து பல…

3 hours ago

ஜெனிலியாவையே மறந்துட்டீங்களேப்பா- சச்சின் பட துணை நடிகைக்கு திடீரென குவிந்த ரசிகர்கள்

சச்சின் ரீரிலீஸ் விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த “சச்சின்” திரைப்படம் கடந்த 18…

3 hours ago

Aunty கேரக்டருக்கு இது எவ்வளவோ மேல்… சிம்ரனை காயப்படுத்திய நடிகை இவரா?

90களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சிம்ரன். இடையழகி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட சிம்ரன், நடிப்பு திறமையால உச்சகட்ட நடிகையானார்.…

3 hours ago

This website uses cookies.