வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த தனியார் வேலை வாய்ப்பு நிறுவன உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் என்.ஜே பிளேஸ்மெண்ட் என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக முருகன் என்பவர் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களாக இவர் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைன் மூலம் விளம்பரம் செய்து வந்தார்.
இதை பார்த்து. சூலூர் அடுத்த முத்து கவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த தாரணி என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் வெளிநாட்டில் வேலை என்ற விளம்பரத்தை பார்த்து நார்வே நாட்டில் வேலைக்காக அணுகியுள்ளார். அப்போது, 6 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறியிருக்கிறார்.
இதனை ஏற்றுக்கொண்ட தாரணியும் பல்வேறு தவணைகளாக பணத்தை அவரது வங்கி கணக்கு அனுப்பி வைத்தார். ஆனால் பணம் கொடுத்து வெகு நாட்கள் ஆகியும் விசா மற்றும் பணி உத்தரவு எதுவும் அவருக்கு வரவில்லை.
இதனால், தான் ஏமாந்து போனதை உணர்ந்த தாரணி, இது தொடர்பாக கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.