இந்துக் கடவுளை கொச்சைப்படுத்தியதாக திமுக எம்பி செந்தில் குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :- முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கலங்கம் விளைவிக்கும் விதமாக தர்மபுரி எம்பி செந்தில் குமார் இந்து மதத்தை இழிவுபடுத்தி வருகிறார். அண்மையில் இந்து மதத்தின் முழு முதற்கடவுளாகிய பார்வதி – பரமேஸ்வரனை கொச்சையாக தொலைக்காட்சியில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்கள். லட்சோப லட்ச சிவனடியார்கள் மற்றும் இந்து மதத்தினரை பாதிக்கும்படியாக இந்த செயல் அமைந்துள்ளது.
இவருடைய செயலை நன்கு கண்காணித்து முதலமைச்சர் ஸ்டாலின் சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும். இதுபோன்று இனி யாரும் நடந்து கொள்ள கூடாது.
எல்லா மதத்தில் பல்வேறு விதமான புராணக்கதைகள் உள்ளன. ஆனால், இந்து மதத்தை மட்டும் குறிவைத்து தாக்குவது வேதனைக்குள்ளாகியுள்ளது. இதுபோன்ற செயல்களை தக்க முறையில் தண்டிக்கா விட்டால், மீண்டும் மீண்டும் இந்து மதத்தை இழிவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.