கோவை : கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற இரு முதியவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் போதை ஒழிப்பிற்கான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர் சந்திப்பின்போது, தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்னம்பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலிசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்த போது, 2 பேர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஒருவர் சோமனூர் பகுதியை சொந்த ஸ்ரீபதி(45), மற்றொருவர் ராஜேந்திரபிரசாத் (64) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் 4 சக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.