கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடம் இருந்து 8.75 கிலோ கிராம் கஞ்சா மற்றும் 71 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கம் உட்பட ஒரு இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக குற்றசம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதால் பலரும் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக கோவை சுற்று வட்டார பகுதிகளில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை, சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. மேலும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கஞ்சா, போதை ஊசி, போன்றவைகளும் கோவையில் அதிகமாக விற்கப்படுவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை காந்திபுரம் காட்டூர் காவல் நிலையத்திற்குட்பட்ட இடங்களில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்கபடுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காந்திபுரத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக சுற்றி திரிந்த கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன் என்பரை பிடித்து விசாரனை செய்ததில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மறைத்து வைத்திருந்த 7.25 கிலோ கிராம் எடைகொண்ட கஞ்சாவையும் அவர் வைத்திருந்த ரூ 67 ஆயிரம் பணத்தையும் கைப்பற்றிய போலீசார், அவரிடமிருந்து இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் காந்திபுரம் பவர்ஹவுஸ் பகுதியில் நடந்த சோதனையில் பீஹாரை சேர்ந்த ராகேஷ் குமார் என்பவரை கைது செய்தனர்.
கைதான ராகேஷ் குமாரிடமிருந்து 1.5 கிலோ கிராம் கஞ்சாவும், அவர் வைத்திருந்த 4 ஆயிரத்து 190 ரூபாய் ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சா வழக்கில் கைதான ஜெகநாதன் மற்றும் ராகேஷ் குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.