கோவை: பாட்னாவில் இருந்து கோவை வந்த ரயிலில் இருந்து 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனை கடத்தி வந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
பாட்னாவில் இருந்து கோவை வழியாக எர்ணாகுளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்று காலை கோவை வந்த ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் உள்ள கழிவறை அருகே பொட்டலங்களாக 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதனைக் கடத்தி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வழியாக வெவ்வேறு மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளா செல்லும் ரயில்களில் தொடர்ந்து இதுபோன்று கஞ்சா கடத்தப்படுவதும், கடத்தல் காரர்கள் கஞ்சா பொட்டலங்களை பொது இடத்தில் வைத்துவிட்டு, வேறு இடத்தில் அமர்ந்து கொள்வதால் அதனை கடத்தி வந்தவர்களை போலீசார் கைது செய்வதில் சிக்கல் நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், தனது கடைசி படம் ஜனநாயகன்தான் என அறிவித்திருந்தார். கடைசி…
நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக கழக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையும்…
சர்ச்சைக்குள் சிக்கிய எம்புரான் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள “எம்புரான்” திரைப்படம் கடந்த மாத இறுதியில் வெளியான நிலையில் ரசிகர்களின்…
தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலை மாற்றப்பட உள்ளார் என்ற செய்தி பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மேலிடம் எடுக்கும்…
கணவனுக்கு நடந்த விசித்திரமான, அதிர்ச்சியான சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. சந்தீப் என்பவர் ரஞ்சனா என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பிறகு…
This website uses cookies.