கோவை : இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாவில் பதிவு செய்து மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
காதலிக்க மறுத்த பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றிய நபரை கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை அடுத்த பிரஸ் காலனி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம் பெண் ஒருவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த கோபிநாதன் என்பவரை காதலித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இளம் பெண் காதலை முறித்துக்கொண்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த கோபிநாதன் அந்த இளம்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கோவை மாவட்டம் சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், கோபிநாதனை கைது செய்து, கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.