கோவையில் ஒரு சில பள்ளிகளைத் தவிர பெரும்பாலான தனியார் பள்ளிகள் வழக்கம் போல இன்று செயல்படுகின்றன.
கோவை மாநகரில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம் போல செயல்படும் என
பெற்றோர்களுக்கு அந்தந்த பள்ளிகள் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அளிக்கப்பட்ட நிலையில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட துவங்கியுள்ளன.
கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக தனியார் பள்ளிகளின் சில அமைப்பினர் பள்ளிகள் இன்று செயல்படாது எனக் கூறி விடுமுறை என அறிவித்திருந்தது. இதற்கு கல்வித் துறை இயக்குனரகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கோவையிலும் பள்ளிகள் இன்று செயல்படாது என தகவல் பரவியது. இதனால் பெற்றோர்கள் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராததால் குழப்பத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை கோவை மாநகரில் பெரும்பாலான பள்ளிகள் வழக்கம்போல செயல்பட துவங்கி உள்ளன. பெரும்பாலான பள்ளி பேருந்துகளும் வழக்கம் போல இயங்கி வருகின்றன. மாணவர்களும் வழக்கம் போல பள்ளிகளுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படி இருக்க கோவை பீளமேடு அருகே உள்ள நேஷனல் மாடல் தனியார் பள்ளி மற்றும் வித்யா நிகேதன் பள்ளி இன்று பள்ளிக்கு விடுமுறை என அறிவித்துள்ளது. இதனால் பள்ளியின் நுழைவாயில் கதவு அடைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த பள்ளி விடுமுறை என குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பியும், மற்ற பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல இயங்குவதால் சில பெற்றோர்கள் நேஷனல் மாடல் பள்ளியில் இன்று பள்ளி செயல்படுகிறதா என்ற சந்தேகத்தில் என்று விசாரித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.