ராணிப்பேட்டை : கோவையில் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி ஒரு கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்த வழக்கில் 4 பேர் அரக்கோணம் கோர்ட்டில் சரணடைந்தனர்.
கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சக்தி என்கிற சத்திய பாண்டி (32). ஓட்டுநரான இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். கடந்த 12ம் தேதி ஆவாரம்பாளையம் செல்லும் சாலையில் உள்ள இளநீர் கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் 2 மோட்டார் சைக்கிளில் வந்தனர் . அந்த கும்பல் வந்த வேகத்தில் சத்திய பாண்டியை சுற்றி வளைத்து கத்தியால் வெட்டினர் .
அப்போது அவர் உயிர் பிழைக்க தப்பி ஓடி அங்குள்ள வீட்டுக்குள் புகுந்தார். அப்போதும் அந்த கும்பல் சத்திய பாண்டியை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
இந்நிலையில் அரக்கோணம் கோர்ட்டில் மாஜிஸ்திரேட் சாய்ரா பானு முன்னிலையில், கோயம்புத்தூர் தீதி பாளையத்தைச் சேர்ந்த காஜா உசேன்(23), செல்வபுரத்தைச் சேர்ந்த சஞ்சய் குமார் (23 ), அதே பகுதியைச் சேர்ந்த சல்பான்கான் (22), நாகர்கோவில் கிருஷ்ணர் கோயிலைச் சேர்ந்த ஆல்வின் (37) ஆகிய 4 பேர் சரணடைந்தனர். அவர்களை 15 நாட்கள் கோர்ட் காலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இச்சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏழ்மையான நிலை… ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர்களுக்கு திடீரென வாய்ப்பில்லாமல் போய்விடும். அந்த சமயங்களில் அவர்களுக்கு உதவி…
பிசியான நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்துள்ள சிவகார்த்திகேயன் தற்போது “பராசக்தி”, “மதராஸி” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.…
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்,பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக,…
திருப்புமுனை அமையாத நடிகர் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியடையவில்லை…
மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…
உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…
This website uses cookies.