கோவை : கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில நபர்களை மர்ம நபர்கள் தாக்கியதாக வட மாநில தொழிலாளர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வட மாநில தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதாகவும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று கோவை டவுன்ஹால் பகுதியில் வட மாநில நபர்களை மர்ம நபர்கள் தாக்கியதாக அப்பகுதியில் 100க்கு மேற்பட்டோர் கூடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், அருகே இருந்த வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது அனைவரையும் காவல்துறையினர் கலைந்து செல்லுமாறு விரட்டியடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவையில் வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய இடையர் வீதியை சேர்ந்த சூரியபிரகாஷ், பிரகாஷ், பிரகதீஸ்வரன், வேல்முருகன். ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்குதல் விவகாரம் தற்போது தனிந்திருக்கும் நிலையில் இச்சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.