கோவை ; கோவையில் ரயிலில் அடிபட்டு யானைகள் அதிகம் இறக்கும் பகுதியில், காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அதனை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சியை மலை ஒட்டி அமைந்து இருக்கிறது. உணவுக்காக வன விலங்குகள் அருகிலுள்ள கிராமங்களில் அடிக்கடி வருவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகளை விரட்டவும், அவற்றை கண்காணிக்கவும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி செய்து வருகின்றனர்.
தற்போது எட்டிமடை பகுதியில் யானை கூட்டமாக மேய்வதை , அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து உள்ளனர். இந்தப் பகுதியில் தான் ரயிலில் அடிபட்டு யானைகள் அதிகளவு இறக்கின்றன. தெற்கு ரயில்வே ரயிலின் வேகத்தை குறைத்தாலும், யானைகள் அடிபடுவது தொடர்ந்து வருகிறது.
யானைகள் உயிரிழப்புக்கு பின், வனத்துறை ரயில்வே தண்டவாளத்தை கடக்க மலையில் இருந்து கீழே இறங்கி வராமல் இருக்க அகழிகள் அமைக்க வேண்டும், அமைக்கப்பட்டு இருந்த அகழிகளை பராமரிக்க வேண்டும், அங்கங்கே மேம்பாலங்களை அமைக்க வேண்டும். இல்லையென்றால் சுரங்கப் பாதை அமைத்து ரயில்களை இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் ரயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
This website uses cookies.