கோவை : கோவையில் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
கோவை குனியமுத்தூர் பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி நிர்வாகி தியாகு என்பவர் கார் மீதும், சுப்புலட்சுமி நகர் பாஜக நிர்வாகி கமலக்கண்ணன் கார் மீதும் பெட்ரோல் குண்டு வீசிய ஜேசுராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு கடந்த 27ஆம் தேதி முதல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதே போல, ஒப்பணக்கார வீதியிலுள்ள மாருதி கலெக்ஷன்ஸ் கடையில் கடந்த மாதம் 22ஆம் தேதி இரவு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் உக்கடம் சிட்டி பார்க் வீதியை பாஷா என்பவர் கடந்த 3ஆம் தேதி கைது செய்யபட்டு மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
மத்திய சிறையில் இருக்கும் இருவரையும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தேசிய பாதுகாபு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதற்கான நகல்கள் ஜேசுராஜ் மற்றும் பாஷாவிடம் வழங்கப்பட்டது.
ஏற்கனவே பாஜக அலுவலகம், பாஜக நிர்வாகியின் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சதாம் உசேன் மற்றும் அகமது சிகாபுதீன் ஆகிய இருவர் மீது கடந்த 13ஆம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டதின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. பெட்ரோல் குண்டு வீசிய நான்கு பேர் மீது இதுவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.