Categories: தமிழகம்

காக்கிக்குள் ஒளிந்திருந்த காந்தகுரல்: வேற லெவலில் பாடி அசத்திய காவல்துறை அதிகாரிகள்..!!(வைரல் வீடியோ)

கோவை: ஆயுதப்படை கவாப்பு நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஐஜியும், காவல் கண்காணிப்பாளரும் போட்டி போட்டு பாட்டு பாடி அனைவரையும் அசத்தியுள்ளனர்.

போலிஸ் என்றாலே கையில் லத்தியும், பேச்சில் அதிகார தோரனை மட்டுமே நினைவுக்கு வருகின்ற நிலையில் அதனை மாற்றி அமைத்திருக்கின்றனர் கோவை காவல் துறை உயரதிகாரிகள். ஆயுதப்படை கவாப்பு நிறைவு நிகழ்ச்சி கோயமுத்து பி ஆர் எஸ் கிரவுண்டில் நடந்திருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் மேற்கு மண்டல ஐஜி சுதாகரும் கோயமுத்தூர் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினமும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் இசைக்கச்சேரி நடந்தன. இந்த நிலையில் திடீரென மேடைக்கு வந்த எஸ் பி செல்வ நாகரத்தினம் மற்றும் சுதாகர் பாடல்களை பாடி அசத்தினர்.

போட்டி என்றாலே மேடையில் பாட பொதுவாக தேர்ந்தெடுக்கப்படும் என்னம்மா கண்ணு சௌக்கியமா பாடல் போட்டி போட்டுக்கொண்டு பாடி அசத்தினர். நடிகர் சத்யராஜ்கான மலேசியா வாசுதேவன் குரலில் ஐஜி சுதாகர் பாட, நடிகர் ரஜினிகாந்த் கான எஸ் பி பி குரலில் எஸ்பி செல்வ நாகரத்தினம் பாடி அசத்தினார்.

காவல்துறை உயரதிகாரிகள் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டுக்கொண்டு இந்தப் பாடலைப் பாடிய பொழுது அரங்கம் அதிர சக காவல் துறையினர் ஆரவாரம் செய்திருக்கின்றனர். காவல்துறையினர் என்றாலே கையில் லத்தியையும் பேச்சில் அதிகாரத்தை மட்டுமே கண்டவர்களுக்கு காவல்துறை அதிகாரிகளின் காந்தக் குரலால் கட்டமைக்கப்பட்ட முந்தைய கரடுமுரடான காவல்துறை பிம்பம் உடைத்தெரிந்திருக்கின்றன. இந்த நிலையில் இவர்களின் பாடல் இணையத்தில் வட்டமடித்து கவனம் ஈர்த்து வருகிறது.

UpdateNews360 Rajesh

Recent Posts

விஜய் முதல்ல ’அத’ பண்ணட்டும்.. விஷால் ட்விஸ்ட் பேச்சு!

நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…

3 minutes ago

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

11 hours ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

12 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

13 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

13 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

13 hours ago

This website uses cookies.