கோவை பிரஸ் கிளப்பில் வெடிகுண்டு வைத்த வழக்கு…. 21 வருடமாக பதுங்கியுள்ள பயங்கரவாதி… மனைவிக்கு சிக்கல்!!
கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சபீர் கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாசர் மதானி என்பவர் கைது செய்யப்பட்டார்.
இதை கண்டித்து 2002 ம் ஆண்டு கோவை பிரஸ் கிளப்பில் சபீர் டிபன் பாக்ஸ் வெடிகுண்டை வைத்தார். ஆனால் அது வெடிக்கவில்லை. வெடிக்காத அந்த குண்டை காவல் துறையினர் கைப்பற்றினர்.
இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். 21 ஆண்டுகள் ஆகியும் சபீர் யார் கையிலும் சிக்காமல் இருந்து வருகிறார்.
அவரது மனைவி கேரள மாநிலம் வயநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சபீர் மீதான வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ தீவிரப்படுத்தியது. அவரது புகைப்படத்தை வைத்து டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அப்பொழுது அவர் தனது மனைவியுடன் சென்று வந்தது பதிவாகி இருந்தது. இதனால் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்த விவரங்கள் அவரது மனைவிக்கு தெரிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.
சபீரின் மனைவியிடம் விசாரணை நடத்த கோவை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு என்.ஐ.ஏ அறிவித்து உள்ளது. இதை அடுத்து சபீரின் மனைவியிடம் கோவை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
This website uses cookies.