கோவை பி.எஸ்.ஜி கல்லூரி ராகிங் விவகாரத்தில் 7 மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் 6ம் தேதி கோவை பீளமேடு பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவனை, அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மொட்டை அடித்து ராகிங் செய்தனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் கொடுத்த புகாரில் அதே கல்லூரியில் விடுதியில் தங்கி படிக்கும் சந்தோஷ், யாலிஷ், தரணிதரன், ஐயப்பன், நித்தியானந்தன், மணி, தில்பர் மற்றும் வெங்கடேஷ் ஆகிய 8 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வெங்கடேஷ் தவிர மற்ற ஏழு பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ராகிங்கில் ஈடுபட்ட மாணவர்கள் 7 பேரும் பிணை கேட்டு கோவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 7 மாணவர்களுக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது, 7 மாணவர்களும் அவரவர் ஊர்களில் உள்ள காவல் நிலையத்தில் 30 நாட்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
தலைமுறைவாக உள்ள மாணவர் வெங்கடேஷை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.