கோவை ; ஆர்எஸ்எஸ் பேரணியில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதாக RSS நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் பொன்னையராஜபுரம் பகுதியில் இருந்து, தேர்நிலைத்திடல் வரை ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெற்றது. முன்னதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்தவும், கூட்டம் நடத்தவும் வெரைட்டிஹால் ரோடு காவல்நிலையத்தில் அனுமதி கேட்டிருந்தனர்.
அப்போது நீதிமன்ற நிபந்தனைகளுக்கு உட்பட்டு பேரணி மற்றும் கூட்டம் நடத்திட போலீசார் அனுமதி வழங்கினர்.
இந்நிலையில், நேற்று நடந்த பேரணியில் நீதிமன்றம் நிபந்தனைகளை மீறி ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சிலம்பாட்டம் நடத்தியதாக ஆர்எஸ்எஸ் கோவை மாவட்ட தலைவர் சுகுமார், செயலாளர் முருகன், இணை செயலாளர் குமார், ரிலேசன் ஆபிசர் விஜயகுமார் உள்ளிட்டோர் மீது வெரைட்டிஹால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.