கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனைசெய்தனர்.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் லஞ்சஒழிப்புதுறை இன்ஸ்பெக்டர் லதா தலைமையிலான போலிசார் சோதனை நடத்தினார்.
இந்த சோதனையின் போது அலுவலகத்தின் உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அறைகள், மேஜைகள், குப்பைதொட்டிகள், ஓய்வறைகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வரி வசூல் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் 60 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். இந்த பணம் தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வரிவசூல் மைய அதிகாரி ராஜேஸ்வரியிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாகவும், விசாரணையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், மற்றும் சங்கர் ஆகியோர் வலியுறுத்தலின் பேரில் பொதுமக்களிடம் லஞ்சமாக பணம்பெற்றதாக லஞ்ச ஒழிப்புதுறையினரிடம் ராஜேஸ்வரி தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.