கோவை :கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள சாக்கடையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையை சுத்தம் செய்வது மற்றும் மலக்குழிகளுக்குள் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே அரசு சட்ட விதிகளுக்கு உட்பட்டு இதை தடை செய்துள்ளது.
ஆனால் இருப்பினும் சாக்கடையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியாளர்கள் தூய்மை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று கோவை ரயில் நிலையம் எதிரே தூய்மை பணியாளர்கள் சாக்கடையில் இறங்கி தூய்மை செய்யும் சம்பவம் நடைபெற்றது. அப்போது அந்த வழியே சென்ற பொதுமக்களில் ஒருவர் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி ஏன் சாக்கடை குழிக்குள் இறங்கினீர்கள், யார் உங்களை இந்த பணிக்கு பயன்படுத்தியது என கேள்வி எழுப்பினார்.
அப்போது சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் இருந்த வயது முதிர்ந்த தொழிலாளி கவுன்சிலர் மற்றும் ஏ.இ., இறங்க சொன்னார்கள் என தகவல் தெரிவித்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை எடுத்த அந்த நபர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.