கோவை விளாங்குறிச்சி அருகே பெட்டிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை சேரன் மாநகர் அருகே உள்ள வினோபாஜி நகரில் உள்ள ஒரு உணவகம் அருகே பெட்டிக்கடை உள்ளது. இரவு சில வாலிபர்கள் இந்த பெட்டிக்கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். சிகரெட்டுக்கான பணத்தை கேட்டபோது தகராறு செய்துள்ளனர். அப்போது,வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தேர்தலுக்காக துபாய் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணம்… மலேசியா ரிட்டர்ன் ஷாக்… சிக்கலில் தமிழக அரசியல் கட்சி..!!
பின்னர் அங்கிருந்து சென்ற வாலிபர்கள் மீண்டும் அந்த பெட்டிக்கடைக்கு வந்து பெட்ரோல் குண்டுவீசி உள்ளனர். இதனால், பெட்டிக்கடையின் ஒரு பகுதி சேதம் அடைந்தது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பீளமேடு வினோபாஜி நகரை சேர்ந்த வரதராஜன்(25) சிகரெட் கேட்டு தகராறு செய்து கூட்டாளிகளுடன் வந்து பெட்ரோல் குண்டு வீசி உள்ளார். இதில் பாட்டில் துண்டு துண்டாக உடைந்து சேதம் அடைந்துள்ளது. உணவகத்திலும் லேசான தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், அது உடனடியாக அணைக்கப்பட்டது. விரைந்து வந்து வரதராஜன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 2 வாலிபர்களை போலீசார் தேடிவருகிறோம், எனக் கூறினர்.
சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…
படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…
கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…
தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…
Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…
ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…
This website uses cookies.