கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன் இலவச wi-fi சேவை துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அலங்கார விளக்குகள் எல்இடி திரை மற்றும் பொழுதுபோக்கு தளங்களும் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே கோவை மாநகராட்சியுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் இலவச வைஃபை இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக Wi-Fi மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ஒரே நேரத்தில் சுமார் 150 பேர் அதிவேக இணைய சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.
ஏற்கனவே வஉசி மைதானத்தில் Wi-Fi மரம் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகே வைபை மரம் துவங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாநகரில் துடியலூர், காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த Wi-Fi மரம் அமைக்கப்பட உள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தடையின்றி இணைய சேவை வழங்க உள்ளதாகவும் அதிவேக இணையதள பயன்பாட்டை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.