கோவை: கோவையில் கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இந்து முன்னணியின் கோட்ட செயலாளர் சதீஷ் கூறியதாவது :- அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் பகுதியில் டாஸ்மாக் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து டாஸ்மாக் மதுக்கடையை அமைக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இந்த பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. மேலும் இங்கு சிவன் கோயிலும் ஐயப்பன் கோவிலும் அமைந்துள்ளது.
முன்னதாக சின்னியம்பாளையம் ஆரம்பப் பள்ளிக்கு முன்பு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை பொதுமக்கள் பலத்த எதிர்ப்பால் மூடப்பட்டது. இப்போது அதே கடை கோவிலுக்கு எதிரே வருவது வேதனை அளிக்கிறது. எனவே இதனை கைவிட வேண்டும். இல்லை என்றால் போராட்டங்களை முன்னெடுப்போம், இவ்வாறு அவர் கூறினார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.