கோவை : கோல்டுவின்ஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட சுயம்பு தம்புரான் கோவில் சுற்று சுவரை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் அகற்றியதற்கு, பா.ஜ.க, இந்து முன்னணி அமைப்பினர் ஓம் நமச்சிவாயா என பாடல் பாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவை கோல்டுவின்ஸ் திருமுருகன் நகரில் சுயம்பு தம்புரான் கோவில் அமைந்துள்து. இந்த கோவிலை சுற்றி மாநகராட்சி இடத்தினை ஆக்கிரமித்து சுற்றுசுவர் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் மாநாகராட்சிக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, இன்று காலை பொக்லைன் இயந்திரங்களுடன் வந்த மாநாகராட்சி அதிகாரிகள் சுற்றுசுவரை அகற்ற முயன்றனர். அப்போது, அங்கு திரண்ட பா.ஜ.க மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அவர்களின் எதிர்ப்பையும் மீறி ஆக்கிரமிப்பு சுற்றுசுவரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். அப்போது, அங்கு திரண்டு இருந்த பெண்கள் ஓம் நமச்சிவாயா என பாடல் பாடி கோவில் சுவரை இடிக்க கண்ணீர் மல்க எதிர்ப்பை தெரிவித்தனர். பா.ஜ.க., இந்து முன்னணி அமைப்பினரின் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.