Categories: தமிழகம்

மொழிப்போர் தியாகிகள் தினம்: கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை..!!

கோவை: இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக தொடர்ந்து மரியாதை செலுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், தியாகிகளுக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவையில் அதிமுக சார்பாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க தான் தமிழ் மொழிக்காக தன்னுயிரை இழந்து வீர மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதை அளித்துக் கொண்டிருக்கிறது.

மொழிப்போரில் கோவை மாவட்டம் முக்கியமான பங்காற்றியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த காலகட்டத்தில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீக்கிரையாகியுள்ளனர் என்றார்.

இதனைதொடர்ந்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ பி.ஆர்.பி அருண் குமார் கூறுகையில், “பெரியநாயக்கன் பாளையம் அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அரசியல் ஆதாயத்திற்காக ரெய்டு நடத்தியுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுகின்றது திமுக அரசு.

முதலில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினர். தற்போது ஒன்றிய செயலாளர் வரை ரெய்டு நடத்த தொடங்கியுள்ளனர். இந்த வழக்குகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், ஏ.கே செல்வராஜ், சூலூர் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிமுக.,வினர் கலந்து கொண்டனர்

UpdateNews360 Rajesh

Recent Posts

தேசிய விருதுக்கு ஆப்பு வைத்த வீடியோ! தன் கையை தானே சுட்டுக்கொண்ட இயக்குனர் பாலா?

கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…

31 minutes ago

அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை கேளுங்க.. மேலிடத்துக்கு HINT கொடுத்த அண்ணாமலை!

தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…

2 hours ago

காணாம போய்ட்டேன்; தனியா போராடிட்டு இருக்கேன்- அதிர்ச்சியை கிளப்பிய நஸ்ரியா!

கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…

2 hours ago

நான் மட்டும் பொண்ணா பொறந்திருந்தா? கமல்ஹாசனை பற்றி பேசி ட்ரோலுக்குள்ளான சூப்பர் ஸ்டார்

உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…

3 hours ago

காதல் திருமணம் செய்த மகள் கொடூர கொலை… பெற்றோர் அரங்கேற்றிய நாடகம்!

ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…

4 hours ago

ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?

சூப்பர் ஸ்டார் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை எவராவது நேரில் பார்த்தால் மரியாதை தானாக வரும் என்று…

4 hours ago

This website uses cookies.