சுற்றுலா சென்ற இடத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த கதி ; தேடத்தேட கிடைத்த சடலங்கள் ; வால்பாறையில் அதிர்ச்சி சம்பவம்
கோவை ; வால்பாறையில் கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறைக்கு கிணத்துக்கடவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் நபில், வினித் குமார், தனுஷ், அஜய், சரத் ஆகிய ஐந்து பேர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். வால்பாறையில் சுற்றுலா பகுதிகளை பார்த்துவிட்டு மாலை 5 மணி அளவில் சோலையார் ஆற்றில் குளித்துள்ளனர்.
திடீரென ஆற்றில் தண்ணீர் அதிக அளவு வந்ததால் ஐந்து பேரையும் தண்ணீர் அடித்து சென்றது. மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு 5 பேரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். சுற்றுலா வந்த இடத்தில் ஐந்து கல்லூரி மாணவர்கள் உயிரிழந்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
This website uses cookies.