கோவை: 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கோவை விழா நடைபெறும் நிலையில், கலைப்படைப்புகளின் கண்காட்சியுடன் இன்று விழா துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கோவையின் பெருமைகளை பறைசாற்றும் வகையிலும், கோவை மக்களிடையே கோவையின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோவை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா நடைபெறாத நிலையில், இவ்வாண்டிற்கான விழா ஏப்ரல் 9 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கஸ்மோபாலிட்டன் கிளப் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நிகழ்வுகளை துவக்கி வைத்தனர்.
விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரேஸ்கோர்ஸில் உள்ள நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள “ஆர்ட் ஸ்ட்ரீட்” துவக்கி வைக்கப்பட்டது. இந்த “ஆர்ட் ஸ்ட்ரீட்”ல் 75 கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். இரண்டு நாட்களுக்கு சித்திரம் வரைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, கலைப்படைப்புகளும் விற்பனை செய்யப்படுகிறது.
கோவை விழாவினை மக்கள் சிறப்பிக்கும் வகையில் “இண்டராக்டிவ் இஸ்டலேஸன்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இண்டராக்டிவ் இஸ்டலேஸன் என்பது தேவையற்ற நெகிழிகளில் வண்ணம் பூசப்பட்டு அதனை கலைப்படைப்பாக மாற்றும் வகையில் மக்களின் பார்வைக்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 14,000 விரல் ரேகைகளைக்கொண்டு உலக சாதனையும் நிகழ்த்தப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து கோவை வாலாங்குளம் குளக்கரையில் இன்று மாலை லேசர் ஷோ ஒளிக்கண்காட்சி துவக்கி வைக்கப்படுகிறது.இதே போல் வருகிற 17ம் தேதி வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.