கோவை புதுப்பதி மலை கிராம் அருகே உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கோவை – கேரளா எல்லையான வாளையாறு அருகே தமிழக எல்லையில் புதுபதி, சின்னாம்பதி உள்ளிட்ட மலை கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் இரவு நேரங்களில் மட்டும் வந்து செல்லும்.
இந்நிலையில் நேற்று மாலை புதுபதி மலை கிராமத்திற்கு அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் ஒற்றை ஆண் காட்டு யானை புகுந்தது. இதையடுத்து தோட்ட உரிமையாளர் மற்றும் அங்கு பணியில் இருந்தவர்கள் யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றனர்.
இருந்தாலும் அந்த யானை மெதுவாக அருகே இருந்த குட்டைக்கு சென்று நீர் அருந்தி விட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்து தகலறிந்து வந்த மதுக்கரை வனச்சரக வன ஊழியர்கள் யானை முழுமையாக வனப்பகுதிக்குள் செல்லும்வரை உடன் சென்று விரட்டியடித்தனர்.
காட்டு யானை கப்பீரமாக நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.