கோவை அருகே வழி தவறி குடியுருப்பு பகுதிக்குள் சுற்றி திரியும் காட்டு யானையை வனத்திற்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றன.
கோவையை அடுத்த பேரூர் தீத்தி பாளையம் கிராமத்தில் குடடைதோட்டம் அருகில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான பூமியில், நேற்று இரவு சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட யானைகள் புகுந்து பயிர்களை சேதம் செய்தது. பின்னர், அவர் தங்கியிருந்த வீட்டு கதகளை உடைத்து திண்பண்டங்களையும், பாத்திரங்களையும் சேதப்படுத்தி உள்ளது.
வீட்டில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து அச்சத்தில் இருந்தனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், வனத்துறை அலுவலர்கள் வரும் முன்பாகவே யானைகள் அங்கிருந்து சென்று விட்டன.
இந்த நிலையில், இரவு முழுவதும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த 6 யானைகள் அதிகாலையில் காளம்பாளையம் பகுதியிலிருந்து மலைக்குச் சென்று கொண்டிருந்தபோது, ஒரு யானை வழிதவறி வேளாங்கண்ணி குடியிருப்பு பகுதியில் நின்றுவிட்டது.
மற்ற ஐந்து யானைகள் வனப்பகுதிக்கு சென்று விட்ட நிலையில், ஒரு யானை மலைப் பகுதிக்குச் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் அலைந்து வருவதாகவும்,குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் சுற்றி திரியும் யானையை வனத்திற்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏப்ரலில் வெளியாகவுள்ள குட் பேட் அக்லி படம் மீது அஜித்குமார் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். சென்னை: மைத்ரி…
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
This website uses cookies.