கோவை – மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் வாகனங்களுக்கு மத்தியில் காட்டு யானை பாகுபலி உலா வந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து ‘பாகுபலி’ என மக்களால் அழைக்கப்படும் காட்டு யானை, அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, விவசாய விளைநிலங்களிலும், வனச்சாலைகளிலும் நடமாடி வருகிறது.
இந்த நிலையில், நேற்றுமுன்தினம் இரவு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை பாகுபலி, மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் ஓடந்துரை பகுதியில் நடமாடியது.
சாலையின் ஓரத்தில் வெகுநேரமாகியும் காட்டு யானை பாகுபலி வனத்தினுள் செல்லாமல் நின்று கொண்டிருந்த நிலையில், வாகன ஓட்டிகளோ, அதனை சற்றும் பொருட்படுத்தாமல் அதிக அளவில் சென்றுகொண்டே இருந்தன. இருப்பினும், காட்டு யானை பாகுபலியோ, யாரையும் அச்சுறுத்தாமல் அதன் போக்கில் சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டே இருந்தது.
ஒருகட்டத்தில், சாலையில் வாகனங்கள் அணிவகுத்து செல்ல அந்த போக்குவரத்து நெரிசலில் யானை பாகுபலி ஊர்ந்து சென்று சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…
தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…
This website uses cookies.