திண்டுக்கல் : பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியர் தான் செய்த தவறை மறைப்பதற்காக பணத்தை திருப்பிக் கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கோவிலூர் அருகே இராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜசேகரன்.
பள்ளியின் வளர்ச்சி நிதி என்று கூறி பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வி அதிகாரி கீதா விசாரணை நடத்தி விட்டுச் சென்றார்.
இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் ராஜசேகரன் அதிகமாக கட்டணம் வசூலித்த பணத்தை திருப்பித் தருவதாக மாணவர்களிடம் கூறியுள்ளார்.
தலைமையாசிரியரிடம் கேட்டபோது பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக பள்ளி மாணவ மாணவியர்களிடம் 50 முதல் 100 ரூபாய் வசூல் செய்வதை ஒப்புக் கொண்டார். அதனை ஏன் திருப்பித் தருவீர்கள் என்று கூறு கேட்ட போது எங்களுடைய உயர் அதிகாரியான மாவட்ட கல்வி அலுவலர் கீதா திருப்பித் தர உத்தரவு செய்ததன் அடிப்படையில் திருப்பித் தருகிறேன் என்று பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார்.
செய்தி சேகரித்தது தலைமை ஆசிரியருக்கு தெரியவந்ததை அடுத்து மாணவர்களுக்கு ஒரு அப்ளிகேஷனை வழங்கி அதில் தாங்களே பணத்தை பெற்றுக் கொண்டேன் என்று எழுதிக் கொடுத்து பெற்றோரின் கையெழுத்தை நீங்களே போட்டுக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் என்று மறைமுகமாக கூறி மாணவ-மாணவிகளிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு மாணவர்களிடம் வாங்கிய 200 ரூபாயை திருப்பி வழங்கி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஏழை மாணவ மாணவியர்களிடம் அதிகக் கட்டணம் வசூல் செய்யும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.