திண்டுக்கல் : பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த தலைமை ஆசிரியர் தான் செய்த தவறை மறைப்பதற்காக பணத்தை திருப்பிக் கொடுத்த அவலம் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கோவிலூர் அருகே இராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் ராஜசேகரன்.
பள்ளியின் வளர்ச்சி நிதி என்று கூறி பள்ளி மாணவ மாணவியர்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்வி அதிகாரி கீதா விசாரணை நடத்தி விட்டுச் சென்றார்.
இதனையடுத்து பள்ளியின் தலைமையாசிரியர் ராஜசேகரன் அதிகமாக கட்டணம் வசூலித்த பணத்தை திருப்பித் தருவதாக மாணவர்களிடம் கூறியுள்ளார்.
தலைமையாசிரியரிடம் கேட்டபோது பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக பள்ளி மாணவ மாணவியர்களிடம் 50 முதல் 100 ரூபாய் வசூல் செய்வதை ஒப்புக் கொண்டார். அதனை ஏன் திருப்பித் தருவீர்கள் என்று கூறு கேட்ட போது எங்களுடைய உயர் அதிகாரியான மாவட்ட கல்வி அலுவலர் கீதா திருப்பித் தர உத்தரவு செய்ததன் அடிப்படையில் திருப்பித் தருகிறேன் என்று பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார்.
செய்தி சேகரித்தது தலைமை ஆசிரியருக்கு தெரியவந்ததை அடுத்து மாணவர்களுக்கு ஒரு அப்ளிகேஷனை வழங்கி அதில் தாங்களே பணத்தை பெற்றுக் கொண்டேன் என்று எழுதிக் கொடுத்து பெற்றோரின் கையெழுத்தை நீங்களே போட்டுக் கொள்ளலாம் அது உங்களுடைய விருப்பம் என்று மறைமுகமாக கூறி மாணவ-மாணவிகளிடம் கையெழுத்துப் பெற்றுக் கொண்டு மாணவர்களிடம் வாங்கிய 200 ரூபாயை திருப்பி வழங்கி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
ஏழை மாணவ மாணவியர்களிடம் அதிகக் கட்டணம் வசூல் செய்யும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.