திருப்பூர் : விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் இருந்த கோபமாக வெளியேறிய மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம்தோறும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம் . இம்மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைத்தளத்தில் உள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடத்த பணிகள் நடைபெற்று வந்தன .
இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வருகை தந்திருந்தனர் . இந்நிலையில் கடந்த மாதங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தரைதளத்திற்கு மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்நிலையில் விவசாய குறைதீர் கூட்டத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் வினீத் விவசாயிகளை நாற்காலியில் அமருமாறும் இடப்பற்றாக்குறை காரணமாக மேலும் கூடுதல் இருக்கைகள் கூட்ட அரங்கிற்கு வெளியில் ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்தார் .
அதனை ஏற்றுக்கொள்ளாத விவசாயிகள் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் திடீரென கோபமடைந்த மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் இருக்கையிலிருந்து எழுந்து மாவட்ட ஆட்சியர் வினீத் அதிகாரிகளையும் எழுந்து போக கூறி கோபமாக கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து விவசாயிகள் தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் விணீத் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து விவசாயிகளிடம் மனுக்களை பெற துவங்கினார்.
ஒரு பிரிவு விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் மற்றொரு பிரிவு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் மனுக்களை அளித்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.