தருமபுரி : ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கல் காவிரி ஆற்றுபடுகையில் ஆய்வு செய்தார்.
தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பொருட்டு ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனத்தின் நிதி உதவியாக 1928.80 கோடி மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகள் ஏற்கனவே முடிவுற்று, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் உள்ள 3 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் மற்றும் 7,639 ஊரக குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்ட மக்களுக்கு தடையின்றி காவிரிக் குடிநீர் கிடைத்திடவும், ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும், குடிநீரின் அளவை மேலும் உயர்த்தும் வகையிலும் ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை 4,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கிட இதற்கான அறிக்கை தயாரிக்கும் பணிகள் உள்ளிட்ட இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்த பணிகள் குறித்து ஒகேனக்கல்லில்மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கான தலைமை நீரேற்று நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், பிரதான சமநிலை நீர்தேக்கத் தொட்டி, துணை மின் நிலையம் ஆகியவை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தேவையான இடம் தேர்வு செய்வது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, இப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.