திருப்பத்தூர் அருகே செல்போன் திருடன் எனக் கூறிய அக்காவை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த பரதேசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மற்றும் கோகிலா இவர்களது மகள் மோனிஷா (19). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மோனிஷாவின் சித்தி இவர்களது வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இவரது சித்தப்பாவின் மகன் 13 வயது சிறுவன் செல்போனை திருடியதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி மோனிஷா அந்த சிறுவனை பார்த்து நீதான் செல்போனை திருடியவன் என கூறி கேலி கிண்டல் செய்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டில் இருந்த கத்தியால் மோனிஷாவை தலை, காது உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். அப்போது, மோனிஷாவின் அலறும் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது பாட்டி பாப்பாத்தியை சிறுவன் கத்தியால் குத்தி கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டார்.
இதில் படுகாயம் அடைந்த மோனிஷா மற்றும் பாப்பாத்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி கருவடிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 40 வயதான உமாசங்கர் புதுச்சேரி மாலிந இளைஞரணித் துணைத் தலைவராக உள்ளார். கடநத் ஒரு…
மூக்குத்தி அம்மன் 2 “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது சுந்தர் சி “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தை இயக்கி…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் பஃவ்சியா பானு, (39). இவர், உறவினரான புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த ஹனிப்கான் (43) என்பவரை, கடந்த…
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் வேலூர் தொகுதியில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் சார்பாக…
நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர்…
இழப்பீடு கேட்டு நோட்டீஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பல காட்சிகளில் தமிழ்…
This website uses cookies.