கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் காதல் விவகாரம் கல்லூரி மாணவியை வெட்டுக்கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மடிச்சல் ஈத்தவிளை பகுதியை சேர்ந்த டெனிஷா. இவர் மார்த்தாண்டம் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த வெர்ஜின் ஜோஸ்வா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக டெனிஷா வெர்ஜின் ஜோஸ்வாவிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால், தாங்கள் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோக்களை தருவதாக மார்த்தாண்டம் அருகே பழைய பெப்சி கம்பெனி பின்புறம் உள்ள தென்னை தோப்பில் வரவழைத்து மறைத்து வைத்திருந்த வெட்டுகத்தியால் டெனிஷாவை சராமரியாக வெட்டிவிட்டு தப்பி சென்று உள்ளான்.
அரிவாள் வெட்டு விழுந்ததில் டெனிஷாவின் சத்தம் கேட்கவே பொதுமக்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மார்தாண்டம் போலீசார் வெர்ஜின் ஜோஸ்வாவை தேடி வருகின்றனர்.
சுந்தர் சி கதையை உடனே ஓகே செய்த நடிகர் கார்த்தி சுந்தர் சி தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குனராக…
நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு! பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத்…
தஞ்சையில், நெருங்கிப் பழகி தனிமையில் இருந்ததால் உருவான கருவைக் கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுத்த ஜிம் உரிமையாளர் கைது…
அடித்து சொல்லும் சந்தீப் கிஷன் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும்…
அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் நாளில், கையெழுத்து இயக்கத்தை நடத்த உள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூர்:…
நடிகர் மாதவனின் புதிய செயலி நடிகர் மாதவன் பங்குதாரராக இருக்கும் ‘Parent Army (Parent Geenee)’ செயலி சென்னையில் உள்ள…
This website uses cookies.