தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பொட்டானிக்கல் பூங்காவில் தாவரங்கள், பூக்கள் அதிக அளவில் பயிரிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோவையில் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் புதுமண தம்பதிகளை அழைத்துச் சென்று அங்கு அவர்களை இயற்கை எழிலோடும், மலர்களோடும் பல வண்ண வகையில் புகைப்படங்களை மற்றும் வீடியோ எடுப்பது வழக்கம்.
இந்நிலையில் இது நாள் வரை புகைப்படத்திற்கு 100 ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது 500 ரூபாய் வசூலிப்பதாகவும், வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கு 500 ரூபாய் வாங்கி வந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக ஒளிப்பதிவாளர்கள், புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொட்டானிக்கல் பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதாலும் அதிக கட்டணம் வசூல் செய்வதாலும் மக்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோன்று கோவை வளாகுளத்தில் படகு சவாரி சுற்றுலா பயணிகள், பொதுமக்களை கவரும் வகையில் துவங்கப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் மக்களின் பொழுதை போக்க குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு இடங்கள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மாநகரில் சுற்றியுள்ள குளங்களை தூர்வாரி அதில் படகு சவாரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அங்கு படகு சவாரி செய்ய கட்டணம் அதிகப்படியாக வசூலிப்பதாகவும், உணவு பொருட்கள் விற்பனையும் அதிக செலவு ஆகிறது என்றும் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
பொதுமக்களில் மன அமைதியை உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பொது இடங்கள் தற்பொழுது அதிக கட்டணம் வசூலிக்கும் இடங்களாக மாறி வருவது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.