தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள பொட்டானிக்கல் பூங்காவில் தாவரங்கள், பூக்கள் அதிக அளவில் பயிரிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
கோவையில் உள்ள புகைப்பட கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் புதுமண தம்பதிகளை அழைத்துச் சென்று அங்கு அவர்களை இயற்கை எழிலோடும், மலர்களோடும் பல வண்ண வகையில் புகைப்படங்களை மற்றும் வீடியோ எடுப்பது வழக்கம்.
இந்நிலையில் இது நாள் வரை புகைப்படத்திற்கு 100 ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது 500 ரூபாய் வசூலிப்பதாகவும், வீடியோ ஒளிப்பதிவு செய்வதற்கு 500 ரூபாய் வாங்கி வந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாக ஒளிப்பதிவாளர்கள், புதுமண தம்பதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொட்டானிக்கல் பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதாலும் அதிக கட்டணம் வசூல் செய்வதாலும் மக்களின் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதேபோன்று கோவை வளாகுளத்தில் படகு சவாரி சுற்றுலா பயணிகள், பொதுமக்களை கவரும் வகையில் துவங்கப்பட்டு உள்ளது. கோவை மாநகரில் மக்களின் பொழுதை போக்க குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்றவாறு இடங்கள் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது மாநகரில் சுற்றியுள்ள குளங்களை தூர்வாரி அதில் படகு சவாரி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அங்கு படகு சவாரி செய்ய கட்டணம் அதிகப்படியாக வசூலிப்பதாகவும், உணவு பொருட்கள் விற்பனையும் அதிக செலவு ஆகிறது என்றும் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
பொதுமக்களில் மன அமைதியை உடல் ஆரோக்கியத்தை பேணிக் காக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பொது இடங்கள் தற்பொழுது அதிக கட்டணம் வசூலிக்கும் இடங்களாக மாறி வருவது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.