தமிழகம்

3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. கல்லூரி பேராசிரியர் கைது!

தஞ்சையில், 3 ஆண்டுகளாக இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த கல்லூரி பேராசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கோவிளாச்சேரியில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறந்து. இங்கு, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஜியாவுதீன் என்பவர் அரபு வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதனிடையே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, இவரை கல்லூரி நிர்வாகத்தினர், பணியில் இருந்து நிறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், இவர், ஆடுதுறையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு, கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் துவக்கினர். இதன் அடிப்படையில், பேராசிரியர் ஜியாவுதீனை, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, சென்னை கிண்டியில் உள்ளா அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பல்கலை அருகில் பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: ‘என் பாதை தெளிவாக தொடங்கியுள்ளது’.. சாட்டையடித்த பின் அண்ணாமலை பேச்சு!

இந்தச் சம்பவத்திற்கு எதிராக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள், SFI உள்ளிட்ட அமைப்பினர், பல்கலை அருகே போராட்டம் நடத்தினர். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நீதி கிடைக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் எடுத்து உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

14 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

14 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

15 hours ago

திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!

தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…

16 hours ago

விஜய் பங்கேற்ற இஃப்தார் நோன்பு.. சீமான் சொன்ன அதிரடி காரணம்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…

17 hours ago

2 மகன்களை கொலை செய்து மாடியில் இருந்து குதித்த தாய் : அதிர்ச்சியூட்டும் சம்பவம்!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…

19 hours ago

This website uses cookies.