தமிழகம்

கல்லூரி கழிவறையில் குழந்தை.. வெளிவந்த மாணவியின் பகீர் பின்னணி!

தஞ்சை கல்லூரி மாணவி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு, அவரது உறவுக்கார இளைஞரே காரணம் என தெரிய வந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் கல்லூரியின் கழிவறையில் குழந்தை பெற்றுள்ளார். பின்னர், அந்தக் குழந்தையை அருகில் உள்ள மறைவிடத்தில் வைத்துவிட்டு வகுப்பறைக்குச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, வகுப்பறையிலே அந்த மாணவி மயங்கமடைந்துள்ளார். எனவே, அவர் கும்பகோணம் அரசினர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி குழந்தை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கழிவறையில் கிடந்த குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர். அங்கு மாணவியும், அவரது குழந்தையும் நலமுடன் உள்ளனர்.

மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது 27 வயது உறவினரே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், ஒரு வருடமாக காதலித்து தனிமையில் இருந்த நிலையில், மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும், காதலித்த நபர் விரைவில் இம்மாணவியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அதனால் காதலித்த உறவினர் மீது மாணவி தரப்பில் புகார் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இறந்த தாயுடன் 9 நாட்களைக் கழித்த சகோதரிகள்.. அதிர்ச்சி காரணம்!

இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் திருவிடைமருதூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

விஜய் ஆபாச பட நடிகர்.. அவர் தந்தை ஆபாச பட இயக்குநர்.. குடும்பமே : சர்ச்சையை கிளப்பிய திமுக பேச்சாளர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…

12 minutes ago

போலீஸ் ரைடுக்கு பயந்து தப்பியோடிய அஜித் பட நடிகரை வளைத்து பிடித்த போலீஸார்! விசாரணை கெடுபிடி…

ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…

15 minutes ago

மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய பள்ளி மாணவன்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞர்!

சென்னையில் மின்சாரம் தாக்கிய உயிருக்கு போராடிய சிறுவனை ரியல் ஹீரோவான இளைஞர் காப்பாற்றிய சம்பவம் பாராட்டுக்களை குவித்து வருகிறது. சென்னை…

1 hour ago

இங்கிலிஷா? நோ- தக் லைஃப் விழாவில் தக் லைஃப் காட்டிய அபிராமி! குவியும் பாராட்டுக்கள்

களைகட்டிய பாடல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…

2 hours ago

முதலாளிக்கு குளிர்பானத்தில் விஷம்… துரோகம் செய்த சிறுவன் : அதிர்ச்சி சம்பவம்!

வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர் பணி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக…

2 hours ago

This website uses cookies.