கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 19 வயது இளைஞர் மற்றும் பள்ளி சிறுமி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதையும் படியுங்க: அவமானம்.. நிழல் முதலமைச்சர் சபரீசன் : CM குடும்பத்துக்கு பலன் கொடுக்கும் விண்வெளி கொள்கை.. அண்ணாமலை காட்டம்!
இந்நிலையில் பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் செய்ய பெற்றோர்கள் இருந்த நிலையில் சம்பவத்தை சிறுமி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கல்லூரி சிறுவன் சிறுமியின் ஊருக்குச் சென்று சிறுமியை அழைத்துக் கொண்டு அய்யர்மலைப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை கல்லூரி மாணவன் அம்மாபேட்டையில் உள்ள தனது பெற்றோர்களுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்களும் அய்யர் மலைக்கு வந்துள்ளனர். வந்த பெற்றோர்கள் ஒரு வாடகை ஆம்னி வேனில் மகனையும் திருமணம் செய்த சிறுமியையும் தோகைமலை காவல் நிலையத்திற்கு ஆஜராக அழைத்துச் சென்றுள்ளனர்.
குளித்தலை- மணப்பாறை சாலையில் சென்றபோது அக்காண்டி மேடு என்ற இடத்தில் சிறுமியின் உறவினர்கள் வந்து வேனை மறித்து ஆம்னி அடித்து நொறுக்கி வேனில் இருந்த மாணவனின் உறவினர்களை அடித்து உதைத்து சிறுமியை மீட்டு சென்றனர்.
சம்பவம் பிரதான சாலையில் சினிமா பாணியில் நடந்ததால் சம்பவ இடத்திற்கு பொதுமக்கள் வந்ததால் பரபரப்பானது. சம்பவ இடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் காயம் அடைந்த கல்லூரி மாணவன் மற்றும் அவரது தம்பியை தோகைமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சம்பவம் குறித்து மாணவனின் தந்தை தோகைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் காரை அடித்து சேதப்படுத்தி, மாணவன் மற்றும் அவரது தம்பியை அடித்து உதைத்ததாக வழக்கு பதிவு செய்து சிறுமியின் உறவினர்கள் கழுகூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுப்ரமணி ( வயது 48) பிச்சைமுத்து மகன் சஞ்சய் (வயது 20) ஆகிய இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.