சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்க: ஆட்சியில் பாஜகவுக்கு பங்கு கிடையாது.. கூட்டணி பற்றி திமுகவுக்கு ஏன் எரியுது? இபிஎஸ் விளாசல்!
சேலத்தை சேர்ந்த மோகன பிரியன் என்பவர் ஐடிஐ படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவி சூர்யா என்ற பெண்ணுடன் பழகி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை மாணவி கல்லூரி செல்ல வேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது பேருந்துக்காக காத்திருந்த மாணவியிடம் மோகன பிரியன் பேச்சு கொடுத்துள்ளர்.
அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவி சூர்யாவை குத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
விசாரணையில், இருவரும் இன்ஸ்டாகிராமில் பழகிய நிலையில், இன்று தான் நேரில் இருவரும் சந்தித்ததாகவும், இளைஞரை பிடிக்கவில்லை என மாணவி கூறியதால் ஆத்திரத்தில் மாணவியை குத்திவிட்டு இளைஞரும் தற்கொலைக்கு முயன்றுள்ளளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
படப்பிடிப்பில் முன்னணி நடிகர் ஒருவர் போதையில் தன்னிடம் அத்துமீறியதாக பிரபல நடிகை பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். இதையும் படியுங்க: சண்ட போட்டு…
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
This website uses cookies.