Categories: தமிழகம்

வீடேறி மாணவியை பெண் கேட்ட கல்லூரி மாணவன்.. தரமறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து!

திருவள்ளூர் மாவட்டம் கொசவன் பேட்டை காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரகுமாரி- சிவ பாலசாமி தம்பதியரின் மகளான சாய் லட்சுமி பிரியா (19) சென்னை தியாகராய கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு கல்வி பயின்று வருகிறார்.

அதே கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்த பரத் (21) என்ற மாணவனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவி சாய் லட்சுமி பிரியாவை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ஏற்கனவே அவரது பெற்றோரிடம் பரத் கேட்டதாக தெரிகிறது ஆனால் மாணவியின் பெற்றோர் அதற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த பரத் திடீரென மாணவியின் வீட்டிற்குள் புகுந்து பெண் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளான்

அப்போது மாணவியின் தாய் சந்திரகுமாரி தனது பெண்ணை உனக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததால் ஆத்திரத்தில் மாணவன் பரத் அங்கிருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து சரமாரியாக கழுத்தில் குத்தியுள்ளார்

இதில் பலத்த காயம் அடைந்த சந்திரகுமாரி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார், அப்போது சந்திரகுமாரி கூச்சலிட்டதை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அங்கிருந்து தப்ப முயன்ற மாணவனை வீட்டுக்குள் தள்ளி பூட்டி இதுகுறித்து பெரியபாளையம் போலீசாருக்கு அளித்த தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சந்திரகுமாரியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்து வைக்க மறுத்ததால் தன்னுடன் படிக்கும் மாணவியின் தாயை கத்தியால் குத்திய இளைஞரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

9 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

10 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

10 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

10 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

10 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

10 hours ago

This website uses cookies.